இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
அடிலெய்டில் நடைபெறும் 2-வது அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பட்லர், பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் மாற்றம் எதுவுமில்லை. இதனால் தினேஷ் கார்த்திக்குக்குப் பதிலாக ரிஷப் பந்த் இந்திய அணியில் விளையாடுகிறார். இங்கிலாந்து அணியில் மலான், மார்க் வுட் காயம் காரணமாக விளையாடவில்லை. பில் சால்ட், ஜோர்டன் ஆகியோர் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளார்கள்.
டி20 உலகக் கோப்பைப் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது பாகிஸ்தான்.