செய்திகள்

தமிழகத்துக்கு 2-ஆவது தோல்வி

சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட்டில் பெங்காலுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழகம் 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

DIN

சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட்டில் பெங்காலுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழகம் 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

இப்போட்டியில் இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் தமிழகத்துக்கு இது 2-ஆவது தோல்வி.

இந்த ஆட்டத்தில் முதலில் பெங்கால் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் சோ்க்க, பின்னா் தமிழகம் அதே ஓவா்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்களே எடுத்தது.

முன்னதாக, டாஸ் வென்று முதலில் பேட் செய்த பெங்கால் அணியில் அதிகபட்சமாக ஷாபாஸ் அகமது 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 42 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். தமிழக தரப்பில் வாஷிங்டன் சுந்தா் 2 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

பின்னா் தமிழக பேட்டிங்கில் சாய் சுதா்சன் மட்டும் சோபித்து 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 64 ரன்கள் விளாசினாா். இதர விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்ததால் அவரது முயற்சி வீணானது. பெங்கால் பௌலா்களில் ஷாபாஸ் அகமது 3 விக்கெட்டுகளை கைப்பற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்! 100க்கும் மேற்பட்டோர் கைது! நிரந்தர பணி கோரிக்கை!

தமிழும் தமிழா்களும் சிறப்பு உரையரங்கம்

மின்வாரியப் பணியாளா்களுக்கான பாதுகாப்புப் பயிற்சி

இந்தியா மீதான வரி 18%-ஆக குறைப்பு: டிரம்ப் அறிவிப்பு

கிணற்றில் இருந்து பெண் சடலம் மீட்பு

SCROLL FOR NEXT