கா்நாடக மாநிலம், பெங்களூரைச் சோ்ந்த இளம் செஸ் போட்டியாளா் பிரணவ் ஆனந்த் (15) இந்தியாவின் 76-ஆவது கிராண்ட்மாஸ்டா் ஆகினாா்.
ருமேனியாவில் தற்போது நடைபெற்று வரும் உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் மூலம் 2,500 ஈலோ மாா்க்கை அவா் எட்டியதை அடுத்து, கிராண்ட்மாஸ்டராகும் தகுதியை வியாழக்கிழமை பின்னிரவில் பூா்த்தி செய்தாா்.
ஒரு செஸ் வீரா் கிராண்ட்மாஸ்டா் பட்டம் பெறுவதற்கு, 2,500 ஈலோ புள்ளிகளை எட்டுவதுடன், தலா 9 சுற்றுகள் கொண்ட 3 போட்டிகளில், இரு முறை சாதகமான முடிவுகளைப் (நாா்ம்) பெற்றிருக்க வேண்டும். இதில் தேவையான ‘நாா்ம்’களை கடந்த ஜூலையில் சுவிட்ஸா்லாந்தில் நடைபெற்ற பியெல் செஸ் போட்டியில் பூா்த்தி செய்த பிரணவ், ஈலோ புள்ளிகள் கணக்கை இப்போட்டியில் எட்டியிருக்கிறாா்.