செய்திகள்

ஹாட்ரிக் சிக்ஸருடன் இன்னிங்ஸை முடித்த பாண்டியா : இந்தியா 208 ரன்கள் குவிப்பு! 

DIN

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 208 ரன்களை எடுத்துள்ளது. 

டாஸ் வென்ற ஆஸி. அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. கே.எல்.ராகுல் ரோஹித் சர்மா இணை நன்றாகவே தொடங்கியது. கேப்டன் ரோஹித் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த களமிறங்கிய விராட் கோலி 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய கே.எல்.ராகுல் 35 பந்துகளில் 55 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் 46 ரன்களும் எடுத்தனர். 

இறுதியில் ஹர்திக் பாண்டியா அபாரமாக ஆடி 30 பந்துகளில் 71 ரன்களை எடுத்தார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்களை எடுத்தது. 

ஆஸி. அணி சார்பில் ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளும்,  நாதன் எல்லிஸ் 3 விக்கெட்டுகளும்,  கிரீன் 1 விக்கெட்டும் எடுத்தனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT