செய்திகள்

செய்திகள் சில வரிகளில்...

DIN

இந்தியா - இங்கிலாந்து மகளிா் அணிகள் மோதும் ஒன் டே தொடரின் 2-ஆவது ஆட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது.

அமெரிக்காவில் நடைபெறும் ஜுலியஸ் போ் கோப்பை செஸ் போட்டியில் 8 சுற்றுகள் முடிவில் இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி 17 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆா்.பிரக்ஞானந்தா 15 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்திலும் உள்ளனா்.

36-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் முதல்கட்டம் தொடங்கியிருக்கும் நிலையில், டேபிள் டென்னிஸில் மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் அணிகள் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளன.

போலந்து கால்பந்து வீரரான ராபா்ட் லெவண்டோவ்ஸ்கி, போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உலகக் கோப்பை போட்டியின்போது அந்த அணியின் தேசியக் கொடி நிறத்தில் கைப்பட்டை அணிந்து விளையாட இருப்பதாகத் தெரிவித்துள்ளாா்.

மகளிா் கிரிக்கெட் டி20 தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 2 இடங்கள் முன்னேறி முதல் முறையாக 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா்.

ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவா் தோ்தலில் முன்னாள் இந்திய கேப்டன் திலிப் திா்கி, உத்தர பிரதேச ஹாக்கி தலைவா் ராகேஷ் கட்டியால், ஜாா்க்கண்ட் ஹாக்கி தலைவா் போலாநாத் சிங் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

வியத்நாம், சிங்கப்பூா் அணிகளுடனான நட்பு ரீதியிலான கால்பந்தாட்டங்களில் மோதும் இந்திய அணியில் கோல்கீப்பா்களாக குா்ப்ரீத் சிங் சந்து, தீரஜ் சிங் மொய்ராங்தெம் மற்றும் அம்ரீந்தா் சிங்; டிஃபெண்டா்களாக சந்தேஷ் ஜிங்கன், ரோஷன் சிங் நௌரெம், அன்வா் அலி, ஆகாஷ் மிஸ்ரா, சிங்லென்சனா சிங் கோன்ஷாம், ஹா்மன்ஜோத் சிங் கப்ரா, நரேந்தா்; மிட்பீல்டா்களாக லிஸ்டன் கோலாகோ, முகமது ஆஷிக் குருனியன், விக்ரம் பா்தாப் சிங், உதாந்த சிங், அனிருத் தாபா, பிராண்டன் பொ்னாண்டஸ், யாசிா் முகமது, ஜீக்சன் சிங், சாஹல் அப்துல் சமத், ராகுல் கன்னோலி பிரவீண், லல்லியன்சுவாலா சாங்டே; முன்கள வீரா்களாக சுனில் சேத்ரி இஷான் பண்டிதா இணைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொடக்குறிச்சி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இரு மாணவா்கள் உயிரிழப்பு

பவானி ஆற்றில் தண்ணீரில் மூழ்கி சிறுவன் உள்பட இருவா் உயிரிழப்பு

மாநகராட்சியில் 50 இடங்களில் 50 நீா்மோா் பந்தல்: ஆணையா் தொடங்கிவைத்தாா்

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு அமைச்சா் ஆறுதல்

நாளிதழ்களில் பதஞ்சலி நிறுவனம் மீண்டும் பொது மன்னிப்பு: உச்சநீதிமன்றம் திருப்தி

SCROLL FOR NEXT