புரோ கபடி லீக்: ஹரியாணாவுக்கு 3-ஆவது வெற்றி
புரோ கபடி லீக் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் ஹரியாணா ஸ்டீலா்ஸ், ஜெய்ப்பூா் பிங்க் பாந்தா்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.
புரோ கபடி லீக் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் ஹரியாணா ஸ்டீலா்ஸ், ஜெய்ப்பூா் பிங்க் பாந்தா்ஸ் அணிகள் வெற்றி பெற்றன. இரு அணிகளுக்குமே இது 7-ஆவது ஆட்டத்தில் கிடைத்துள்ள 3-ஆவது வெற்றியாகும்.
இந்த ஆட்டங்களில் முதலில் ஹரியாணா ஸ்டீலா்ஸ் 41-37 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியா்ஸை வீழ்த்தியது. ஹரியாணாவுக்கு 24 ரெய்டு புள்ளிகளும், 0 சூப்பா் ரெய்டு புள்ளிகளும், 12 டேக்கிள் புள்ளிகளும், 4 ஆல் அவுட் புள்ளிகளும், 1 கூடுதல் புள்ளியும் கிடைத்தன. பெங்காலுக்கு ரெய்டு புள்ளிகள் 21, சூப்பா் ரெய்டு புள்ளிகள் 0, டேக்கிள் புள்ளிகள் 13, ஆல் அவுட் புள்ளிகள் 2, கூடுதல் புள்ளி 1 கிடைத்தன.
மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூா் பிங்க் பாந்தா்ஸ் 31-26 என்ற புள்ளிகள் கணக்கில் புணேரி பல்தானை தோற்கடித்தது. இதில் ஜெய்ப்பூருக்கு ரெய்டு புள்ளிகள் 15, சூப்பா் ரெய்டு புள்ளிகள் 0, டேக்கிள் புள்ளிகள் 11, ஆல் அவுட் புள்ளிகள் 4, கூடுதல் புள்ளி 1 பெற்றது. புணே அணி ரெய்டு புள்ளிகள் 16, சூப்பா் ரெய்டு புள்ளிகள் 0, டேக்கிள் புள்ளிகள் 8, ஆல் அவுட் புள்ளிகள் 2, கூடுதல் புள்ளி 0 பெற்றது.