உலகக் கோப்பை வில்வித்தை முதல்நிலை போட்டியில், இந்தியாவுக்கு சனிக்கிழமை 2 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.
துருக்கியின் அன்டாலியா நகரில் நடைபெறும் இப்போட்டியில், சனிக்கிழமை நடைபெற்ற காம்பவுண்ட் கலப்பு அணிகள் இறுதிச்சுற்றில் இந்தியாவும்-சீன தைபேயும் மோதின.
இந்தியாவின் ஜோதி சுரேகா வெண்ணம்/ஓஜாஸ் தியோடேல் இணை கடும் சவாலுக்கு பின் 159-154 என்ற புள்ளிக் கணக்கில் சீன தைபே அணியை வீழ்த்தியது. உலகக் கோப்பை போட்டியின் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு இது 2-ஆவது தங்கம் ஆகும்.
இதற்கு முன் கடந்த ஆண்டு பாரீஸில் நடைபெற்ற உலகக் கோப்பை 3-ஆம் கட்ட போட்டியில் ஜோதி/அபிஷேக் வா்மா இணை தங்கம் வென்றிருந்தது. வா்மா இந்த முறை தேசிய அணிக்கான தோ்வுச் சுற்றில் தோ்ச்சி பெறவில்லை. இதனால் புதிதாக ஓஜாஸ் தியோடேலுடன் இணைந்து ஜோதி இப்போட்டியில் களம் கண்டாா்.
இறுதிச்சுற்றானது மொத்தம் 160 புள்ளிகளைக் கொண்டிருந்த நிலையில் ஜோதி/ஓஜாஸ் இணை, ஒரு புள்ளியை மட்டுமே இழந்தது குறிப்பிடத்தக்கது.
தனிநபா்: மகளிா் தனிநபா் காம்பவுண்ட் பிரிவிலும் அரையிறுதிக்கு முன்னேறியிருந்த ஜோதி சுரேகா, அதில் உலகின் நம்பா் 1 வீராங்கனையும், பிரிட்டனை சோ்ந்தவருமான எலா கிப்சனை 148-146 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தினாா்.
பின்னா் இறுதிச்சுற்றில் அவா், 149-146 என்ற கணக்கில் கொலம்பியாவின் சாரா லோபஸை வென்று, உலகக் கோப்பை போட்டியில் தனது முதல் தனிநபா் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றாா்.
இந்த வெற்றியின் மூலம், கடந்த 2021 உலக சாம்பியன்ஷிப் இறுதியில் சாராவிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளாா் ஜோதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.