செய்திகள்

ஐபிஎல் போட்டியிலிருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்

DIN

ஐபிஎல் போட்டியிலிருந்து காயம் காரணமாக விலகுவதாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வாஷிங்டன் சுந்தர் அறிவித்துள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல்-ரவுண்டராக விளையாடி வருபவர் வாஷிங்டன் சுந்தர்.

இந்நிலையில், தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து முழுமையாக விலகுவதாக ஹைதராபாத் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இவர், கடைசியாக தில்லி அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி 15 பந்துகளுக்கு 24 ரன்கள் எடுத்து நம்பிக்கை அளித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் ஐதராபாத் அணிக்கு வாஷிங்கடன் சுந்தரின் விலகல் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக மாற்று வீரர் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கே.எல். ராகுலை சாடிய லக்னெள உரிமையாளர்: நேரலையில் கண்ட ரசிகர்கள் ஆவேசம்!

குரூப்-2 ஏ பதிவிகளுக்கு கலந்தாய்வு எப்போது?

சென்னையில் தோனியின் கடைசிப் போட்டியா? சற்றுநேரத்தில் டிக்கெட் விற்பனை

விமானிகள் பற்றாக்குறை... ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் சேவை குறைப்பு

தென் சென்னை வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி பழுது!

SCROLL FOR NEXT