முகப்பு
செய்திகள்

ஐபிஎல் 2023: அணி தோல்வியிலும் ஆட்ட நாயகன் விருது வென்றவர்கள்! 

இந்தாண்டு ஐபிஎல் போட்டிகளில் தங்களது அணி தோல்வியுற்றாலும் ஆட்டநாயகன் விருது வென்றவர்கள் பட்டியலில் தில்லி வீரர் இணைந்துள்ளார். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:54 PM
தில்லி அணி வீரர் மிட்செல் மார்ஷ்
பகிர்:

தில்லி கேபிடல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி தில்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர் முடிவில் 197/6 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய தில்லி அணி 20 ஓவர் முடிவில் 188/6 ரன்கள் எடுத்து 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

தில்லி அணியில் மிட்செல் மார்ஷ் பந்து வீச்சில் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். பின்னர் பேட்டிங்கில் 63 ரன்கள் எடுத்து அசத்தினார். இருப்பினும் தில்லி அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மார்ஷின் சிறப்பான ஆட்டத்திற்காக ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. 

இதுபோல, இந்தாண்டு ஐபிஎல் போட்டியில் தங்களது அணி தோல்வியுற்றாலும் தனிப்பட்ட வித்ததில் சிறப்பாக விளையாடி 3 பேர் ஆட்டநாயகன் விருது வென்றுள்ளனர். 

ஷிகர் தவான் - ஹைதராபாத்திற்கு எதிராக. 
வெங்கடேஷ் ஐயர் - மும்பை இந்தியன்ஸ்கு எதிராக. 
மிட்செல் மார்ஷ் - ஹைதராபாத்திற்கு எதிராக. 

முழு கட்டுரையைப் படிக்க →