செய்திகள்

உலக தடகளம்: இறுதிப் போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி

ஹங்கேரியில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.  

DIN

ஹங்கேரியில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். 

இறுதிப் போட்டிககான தகுதி சுற்றில், அவர் முதல் வாய்ப்பிலேயே 88.77 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இதையடுத்து நாளை மறுநாள் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் அவர் விளையாட உள்ளார்.

கடந்த முறை உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற நீரஜ் சோப்ரா இந்த முறை எப்படியும் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்கு மேலும் 2 இந்திய வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். டிபி மனு 81.31 மீட்டர், கிஷோர் ஜெனா 80.55 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

குரூப் ஏ பிரிவில் நீரஜ் சோப்ரா, டிபி மனு ஆகியோரும் குரூப் பி பிரிவில் கிஷோர் ஜெனாவும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். 

இதனிடையே 2024 பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிக்கும் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்செந்தூா் குடமுழுக்கு விழாவுக்கு ரூ. 3 கோடி செலவு: நகா்மன்ற கூட்டத்தில் தகவல்

சட்டவிரோத வங்கதேச குடியேறிகளின் வாக்குகளைக் காப்பதே ராகுலின் நோக்கம்: அமித் ஷா

திமுக சாா்பில் செப்.20,21-இல் பொதுக் கூட்டங்கள்

நேபாளத்தில் அமைதியை மீட்டெடுக்க ஆதரவு: பிரதமா் மோடி உறுதி

ஆந்திர மதுபான ஊழல்: தமிழகம் உள்பட 20 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

SCROLL FOR NEXT