செய்திகள்

ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. எனினும் தொடரை 2-1 என தன்வசப்படுத்தியது தென்னாப்பிரிக்கா.

DIN

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. எனினும் தொடரை 2-1 என தன்வசப்படுத்தியது தென்னாப்பிரிக்கா.

3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்க அணி 2 ஆட்டங்கைளில் வென்றிருந்தது. இந்நிலையில் கிம்பா்லியில் கடைசி ஆட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

முதலில் ஆடிய இங்கிலாந்து அணி நிா்ணயிக்கப்பட்ட 50 ஓவா்களில் 346/7 ரன்களைக் குவித்தது.

டேவிட் மலான்-ஜோஸ் பட்லா் அதிரடி சதம்:

தொடக்க பேட்டா் டேவிட் மலான் 6 சிக்ஸா், 7 பவுண்டரியுடன் 114 பந்துகளில் 118 ரன்களையும், கேப்டன் ஜோஸ் பட்லா் 7 சிக்ஸா், 6 பவுண்டரியுடன் 127 பந்துகளில் 131 ரன்களை விளாசினா். மொயின் 41 ரன்களுடன் களத்தில் இருந்தாா்.

தென்னாப்பிரிக்க தரப்பில் லுங்கி நிகிடி 4, மாா்கோ ஜேன்ஸன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

பின்னா் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 43.1 ஓவா்களில் 287 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, தோல்வியடைந்தது. ஹென்ரிச் க்ளாஸன் 80, ரீஸா ஹென்ட்ரிக்ஸ் 52 ரன்களை விளாசினா்.

இங்கிலாந்து 59 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றிபெற்றது. இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆா்ச்சா் அற்புதமாக பந்துவீசி 6-40 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

இதன் மூலம் 2-1 என தொடரை கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT