செய்திகள்

ரஞ்சி கோப்பை இறுதிச்சுற்று: 174 ரன்களுக்கு ஆட்டமிழந்த பெங்கால்!

DIN

ரஞ்சி கோப்பை இறுதிச்சுற்றில் பெங்கால் அணி முதல் இன்னிங்ஸில் 174 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.

ரஞ்சி கோப்பை இறுதி ஆட்டம் ஈடன் கார்டன்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற செளராஷ்டிர அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. 

உனாட்கட், சகாரியா ஆகியோரின் அசத்தலான பந்துவீச்சில் தடுமாறினார்கள் பெங்கால் பேட்டர்கள். 2 ஓவர்களுக்குள் 2 ரன்களுக்கு முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்தது பெங்கால் அணி. இதனால் முதல் இன்னிங்ஸில் 54.1 ஓவர்களில் 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கடைசி 4 விக்கெட்டுகள் 8 ரன்களுக்கு வீழ்ந்தன. ஷாபாஸ் அஹமது 69, அபிஷேக் போரல் 50 ரன்கள் எடுத்தார்கள். செளராஷ்டிர அணியின் உனாட்கட், சகாரியா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT