செய்திகள்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்குப் புதிய பந்துவீச்சுப் பயிற்சியாளர்!

பஞ்சாப் கிங்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் சுனில் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

DIN

பஞ்சாப் கிங்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் சுனில் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

2022 ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி லீக் சுற்றின் முடிவில் 6-ம் இடத்தையே பிடித்தது. 2019, 2020, 2021, 2022 என கடந்த நான்கு ஆண்டுகளிலும் பஞ்சாப் கிங்ஸ் அணி 6-ம் இடத்தையே பிடித்தது. ஐபிஎல் போட்டியில் இருமுறை மட்டுமே (2008, 2014) பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுள்ளது.  

2022 செப்டம்பர் மாதம், பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக டிரவர் பேலிஸ் நியமிக்கப்பட்டார். மேலும் புதிய கேப்டனாக ஷிகர் தவன் தேர்வாகியுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக வாசிம் ஜாஃபர் நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் சுனில் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமீபகாலம் வரைக்கும் இந்திய அணியின் தேர்வுக்குழு உறுப்பினராக இருந்த சுனில் ஜோஷி, இதற்கு முன்பு பஞ்சாப் கிங்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். 2008, 2009-ல் ஆர்சிபி அணியில் இடம்பெற்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேது விரைவு ரயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்!

ஜெயிலர் 2 படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய ரஜினி!

ஸ்டாலின் தலைமையேற்றால் ராகுல் பிரதமராவார்! காங்கிரஸ் மூத்த தலைவர்

த்ரிஷா பற்றி பேச்சு: வருத்தம் தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்!

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸிலேயே பாகிஸ்தான் தோற்றுவிட்டது: வாகர் யூனிஸ்

SCROLL FOR NEXT