செய்திகள்

தோனி ஒருவர் மட்டுமே விளையாடி உலகக் கோப்பைகளை பெற்றுத்தரவில்லை: ஹர்பஜன் குற்றச்சாட்டு!

DIN

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. 

கடந்த 10 வருடங்களாக இந்திய அணி ஒரு ஐசிசி கோப்பையைக்கூட வென்றதில்லை. தோனி தலைமையில் 2013இல் வென்றதே கடைசி என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் சமூக வலைதலங்களில் தோனியை புகழ ஆரம்பித்தனர். 

தோனி ரசிகர் ஒருவர் ட்விட்டரில், “பயிற்சியாளர்கள் இல்லை, முக்கியமான வீரர்கள் இல்லை, இளம் வீரர்கள், கேப்டன்சியில் முன்னனுபவமில்லை. இருந்தும் நல்ல பார்மில் இருந்த ஆஸ்திரேலியாவை அரையிறுதியில் வென்றது” எனக் குறிப்பிட்டு இருந்தார். 

இதற்கு பதிலளிக்கும் விதமாக ஹர்பஜன் சிங் அந்த ட்விட்டை எடுத்து கிண்டலாக பதிவிட்டு இருந்தார். அதில், “ஆமாம், இந்தப் போட்டிகளில் இவர் ஒருவர் மட்டுமே விளையாடினார். மற்ற 10 பேர்கள் விளையாடவில்லை. அதனால் அவர் தனியாக விளையாடி உலகக் கோப்பைகளை வென்றுவிட்டார்...ஆஸி. அல்லது மற்ற நாடுகள் வெற்றி பெற்றால் அவர்களது பெயரிருக்கும். ஆனால் இந்தியாவில் மட்டும் கேப்டன்களின் வெற்றி என இருக்கும். (சிரிப்பு எமோஜி). இது குழு விளையாட்டு. வெற்றியும் தோல்வியும் குழுவோடு சம்பந்தப்பட்டது” எனக் கூறியிருந்தார். 

இந்த பதிவு சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுடன் கூட்டணி இல்லை:சரத் பவார்

இரவு 8 மணிக்குமேல்...: தமன்னாவின் மோசமான பண்பு என்ன தெரியுமா?

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

ஒவ்வொரு நாளும் போராட்டமாக இருந்தது; டி20 உலகக் கோப்பையில் இடம்பிடித்த இந்திய வீரர் பேச்சு!

கன்னக்குழி அழகே..!

SCROLL FOR NEXT