சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி: இந்தியாவுக்கு தங்கம்!
சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில், பெண்களுக்கான 800 மீட்டர் தடகளப் பிரிவில் இந்தியாவின் கீதாஞ்சலி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில், பெண்களுக்கான 800 மீட்டர் தடகளப் பிரிவில் இந்தியாவின் கீதாஞ்சலி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டு போட்டிகள் ஜூன் 17ஆம் தேதிமுதல் பெர்லினில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 198 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இப்போட்டியில் ஒட்டுமொத்தமாக 190 நாடுகளைச் சேர்ந்த 7,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
Advertisement
Advertisement
மொத்தம் 26 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், இன்று நடைபெற்ற பெண்களுக்கான 8000 மீட்டர் தடகளப் போட்டியில் இந்தியாவின் கீதாஞ்சலி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டு போட்டியில் இந்தியா பெறும் முதல் தங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.