கடைசி டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்தியா நிதானத் தொடக்கம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் குவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவித்து தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணியின் தரப்பில் அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 180 ரன்களும், கேமரூன் கிரீன் 114 ரன்களும் குவித்தனர். இந்திய அணியின் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதனையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் குவித்துள்ளது.
கேப்டன் ரோஹித் சர்மா 17 ரன்களுடனும், சுப்மன் கில் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இதையும் படிக்க: தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பு... மார்ச் 23ல் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி?
இந்திய அணி ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 444 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.