மும்பை: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இன்று இந்தியாவும், இலங்கையும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இலங்கை அணியில் துஷன் ஹேமந்தா சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணி மாற்றமின்றி களமிறங்குகிறது.
உலகக் கோப்பையில் விளையாடிய 6 போட்டிகளையும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணியை, இரு வெற்றிகளை மட்டுமே பெற்று அரையிறுதி வாய்ப்புக்காக போராடும் இலங்கை சமாளிக்குமா?