விராட் கோலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் 50வது சதத்தை அடித்து, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்ததற்காக விராட் கோலிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இது தொடர்பாக சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி தனது 50வது சதத்தை மட்டும் அடிக்கவில்லை, சிறந்த விளையாட்டு வீரருக்கான வலிமை மற்றும் விடாமுயற்சியை எடுத்துக்காட்டியுள்ளார்.
Advertisement
Advertisement
அவரின் அர்ப்பணிப்பு மற்றும் திறமைக்கு புதிய மைல்கல்லாக இந்த சாதனை அமைந்துள்ளது. நான் எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தனது சாதனைகள் மூலம் எதிர்கால தலைமுறைக்கான புதிய எல்லைகளை அவர் வகுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.