இந்தியாவின் அபிஷேக் வா்மா/ஜோதி சுரேகா கூட்டணி
இந்தியாவின் அபிஷேக் வா்மா/ஜோதி சுரேகா கூட்டணி PTI
செய்திகள்

உலகக் கோப்பை வில்வித்தை: 3 தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய அணிகள்!

DIN

சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்திய அணிகள் 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்கள்.

மகளிர் அணி (ஜோதி சுரேகா, அதிதி ஸ்வாமி, பர்ணீத் கௌர் கூட்டணி) இத்தாலியை 236-225 என்ற புள்ளிகளில் வீழ்த்தி தங்கம் வென்றது.

ஆடவர் அணி (அபிஷேக் வர்மா, பிரயன்ஷ், பிரதமேஷ் ) நெதர்லாந்தினை 238-231 என்ற புள்ளிகளில் வீழ்த்தி தங்கம் வென்றது.

காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வா்மா/ஜோதி சுரேகா கூட்டணி எஸ்டோனியாவை 158-157 புள்ளிகளில் வென்று தங்கம் வென்றனர்.

நடப்பு ஆசிய விளையாட்டு சாம்பியன் ஜோதிக்கு இது இரட்டை தங்கப் பதக்கமாகும். மேலும் அவர் தனிநபர் பிரிவிலும் அரையிறுதிப் போட்டியில் விளையாடவிருக்கிறார்.

கலப்பு பிரிவில் தனி நபர் பதக்கத்திற்கான வேட்டையிலும் பிரயன்ஷ் உள்ளார்.

ரீகா்வ் பதக்க சுற்றுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்றன. இதில் 2 தங்கங்களை இந்தியா எதிர்பார்க்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT