ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அர்ஷத் நதீம் அரசுக்கு வைத்த கோரிக்கை!
பாரீஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் அந்நாட்டு அரசுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் அந்நாட்டு அரசுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
கடைசியாக கடந்த 1984 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் பாகிஸ்தான் தங்கப் பதக்கம் வென்றிருந்தது. அதன் பின், பாகிஸ்தானுக்கு ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் கிடைக்கவில்லை. பாரீஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றதன் மூலம், ஒலிம்பிக்கில் பாகிஸ்தானின் தங்கப் பதக்க தேடுதலை முடிவுக்கு கொண்டு வந்தார் அர்ஷத் நதீம். இறுதிப்போட்டியில் 92.97 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து அவர் சாதனை படைத்தார்.
இந்த நிலையில், பாகிஸ்தானின் தடகள வீராங்கனைகளுக்கு விளையாட்டுப் போட்டிகளுக்குத் தேவையான நவீன வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால், மிகப் பெரிய போட்டிகளில் அவர்களால் பல சாதனைகளை படைக்க முடியும் என அர்ஷத் நதீம் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
Advertisement
Advertisement
இது தொடர்பாக அவர் பேசியதாவது: எங்களது பகுதியில் உள்ள பெண்களுக்கு உயர்கல்வி பெறுவதற்கான வசதிகள் தேவைப்படுகின்றன. பெண்கள் மட்டுமல்லாது, ஆண்களுக்கும் உயர்கல்வி பெறுவதற்கான வசதிகள் தேவைப்படுகின்றன. தற்போது உள்ள சூழலில் இளம் வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டுத் துறையில் பெரிய அளவில் சாதனைகள் படைக்க சிறந்த நவீன வசதிகள் தேவைப்படுகின்றன என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.