டிங் லிரென் - குகேஷ்.  படங்கள்: எக்ஸ் / ஃபிடே
செய்திகள்

உலக செஸ் சாம்பியன்ஷிப்: மீண்டும் டிராவில் முடிந்த 8ஆவது சுற்று..!

உலக செஸ் சாம்பியன்ஷிப் 8-வது சுற்றும் டிராவில் முடிந்தது.

DIN

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனும், இந்திய வீரர் குகேஷும் விளையாடி வருகின்றனர்.

செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வென்ற குகேஷ், நடப்பு சாம்பியன் டிங் லிரெனுடம் மோதும் வாய்ப்பு கிடைத்தது. இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற சாதனையை குகேஷ் படைத்தார்.

14 சுற்றுகளைக் கொண்ட இந்தத் தொடரில் முதலில் 7.5 புள்ளிகள் பெறும் நபர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

இந்தத் தொடரின் முதல் சுற்றில் டிங் லிரேனும் மூன்றாவது சுற்றில் குகேஷும் வெற்றி பெற்றனர். இரண்டாவது சுற்று டிராவில் முடிந்தது.

மேலும் 4,5,6,7-வது சுற்றுகளும் தொடர்ந்து டிராவிலேயே முடிந்தன.

இந்த நிலையில் நடைபெற்ற 8ஆவது சுற்றில் குகேஷ் கறுப்பு நிற காய்களுடனும் லிரென் வெள்ளை நிற காய்களுடனும் விளையாடினார்கள்.

இருவருமே வெற்றி பெறும் வாய்ப்பினை தவறவிட்டார்கள். இறுதியில் 51ஆவது நகர்த்தலில் இருவரும் டிராவில் முடித்துக்கொண்டார்கள்.

4-4 என்ற புள்ளிகளுடன் இருவரும் சமநிலையில் இருக்கிறார்கள். மீதம் 6 போட்டிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அயலகத் தமிழா் மாநாட்டில் 4 ஒப்பந்தங்கள்

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் தீ தடுப்பு சோதனை

பெரிய சூரியூா் புதிய மைதானத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு

கிருஷ்ணகிரியில் தீண்டாமை ஒழிப்பு: முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT