செய்திகள்

இந்திய அணியுடன் மீண்டும் இணைந்த அஸ்வின்!

DIN

மருத்துவ அவசரம் காரணமாக சென்னைக்கு வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் இந்திய அணியுடன் இன்று (பிப்ரவரி 18) இணைந்தார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் இரண்டாம் நாளில் அவசர காரணங்களுக்காக இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சென்னை திரும்பினார்.

இந்த நிலையில், அவர் இந்திய அணியுடன் மீண்டும் இணைந்துள்ளார்.

இது தொடர்பாக பிசிசிஐ தரப்பில் தெரிவித்திருப்பதாவது: இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் இந்திய அணியுடன் இணைந்துள்ளார். மருத்துவ அவசரம் காரணமாக வீடு திரும்பிய அவர் அணியில் மீண்டும் இணைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நம்பிக்கையின் வானவில்...!

திட்டக்குடி அருகே கார் டயர் வெடித்து கார் விபத்து: 3 பேர் பலி

அமித் ஷாவை பிரதமராக்கவே மோடி பிரசாரம்: கேஜரிவால் பேச்சு

வாக்குகளை அள்ளிய காங். வறுமையை ஒழிக்கவில்லை: நயாப் சைனி

அகிலேஷ் யாதவால் இந்தியா - பாக். போட்டியாக மாறிய கன்னௌஜ்!

SCROLL FOR NEXT