செய்திகள்

மிகப் பெரிய தோல்விக்குப் பிறகு இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியது என்ன?

இங்கிலாந்துக்கு தோல்வியைப் பெற்றுத் தரும் இடத்தில் இருக்க நாங்கள் விரும்ப மாட்டோம்.

DIN

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவு செய்தது.

இந்திய அணியுடன் ஏற்பட்ட மிகப் பெரிய தோல்விக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த பென் ஸ்டோக்ஸ் பேசியதாவது: போட்டிக்கு முன்னதாக இந்த வாரம் கடினமானதாக இருக்கப் போகிறது எனக் கூறினேன். இங்கிலாந்துக்கு தோல்வியைப் பெற்றுத் தரும் இடத்தில் இருக்க நாங்கள் விரும்ப மாட்டோம்.

இங்கிலாந்து வீரர்களிடத்தில் ஏமாற்றமென்பது கண்டிப்பாக இருக்கும். இன்னும் நமக்கு இரண்டு போட்டிகள் உள்ளன. அணியின் கேப்டனாக அந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற வேண்டும் என நான் நினைக்கிறேன் என்றார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது போட்டி வருகிற பிப்ரவரி 23 முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

35 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற மே.இ.தீ. அணி..! 5 விக்கெட்டுகள் வீழ்த்தியவருக்கு ஆட்ட நாயகன் விருதில்லை!

முன்னேற்றப் பாதையில் இந்தியா - அமெரிக்கா உறவு: ரஷியா என்ன நினைக்கிறது?

நாட்டிலேயே முரட்டு அடிமை யார் தெரியுமா? உதயநிதி கடும் விமர்சனம்

இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் ஜஸ்பிரித் பும்ரா, சஞ்சு சாம்சன் இல்லை!

அஜித்தைச் சந்தித்த சிவகார்த்திகேயன்!

SCROLL FOR NEXT