செய்திகள்

மிகப் பெரிய தோல்விக்குப் பிறகு இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியது என்ன?

இங்கிலாந்துக்கு தோல்வியைப் பெற்றுத் தரும் இடத்தில் இருக்க நாங்கள் விரும்ப மாட்டோம்.

DIN

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவு செய்தது.

இந்திய அணியுடன் ஏற்பட்ட மிகப் பெரிய தோல்விக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த பென் ஸ்டோக்ஸ் பேசியதாவது: போட்டிக்கு முன்னதாக இந்த வாரம் கடினமானதாக இருக்கப் போகிறது எனக் கூறினேன். இங்கிலாந்துக்கு தோல்வியைப் பெற்றுத் தரும் இடத்தில் இருக்க நாங்கள் விரும்ப மாட்டோம்.

இங்கிலாந்து வீரர்களிடத்தில் ஏமாற்றமென்பது கண்டிப்பாக இருக்கும். இன்னும் நமக்கு இரண்டு போட்டிகள் உள்ளன. அணியின் கேப்டனாக அந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற வேண்டும் என நான் நினைக்கிறேன் என்றார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது போட்டி வருகிற பிப்ரவரி 23 முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT