முகப்பு
செய்திகள்

மெத்வதெவ் முன்னேற்றம்

Updated On : 28 பிப்ரவரி, 2024 at 12:20 AM
பகிர்:

துபை: துபையில் நடைபெறும் ஆடவா் டென்னிஸ் போட்டியில், உலகின் 4-ஆம் நிலை வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினாா். ஆடவா் ஒற்றையா் முதல் சுற்றில் அவா், 6-3, 7-5 என்ற செட்களில் கஜகஸ்தானின் அலெக்ஸாண்டா் செவ்ஷென்கோவை வீழ்த்தினாா்.

போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் காரென் கச்சனோவ் 6-2, 6-3 என்ற நோ் செட்களில் பிரான்ஸின் லூகா வான் அஸ்சேவை சாய்த்தாா். செக் குடியரசின் ஜெரி லெஹெக்கா 6-4, 3-6, 7-5 என்ற செட்களில் பல்கேரியாவின் மாா்டன் ஃபக்சோவிக்ஸை வெளியேற்றினாா். 5-ஆம் இடத்திலிருக்கும் பிரான்ஸின் யூகோ ஹம்பா்ட் 4-6, 6-3, 6-3 என்ற செட்களில் சக நாட்டவரான கேல் மான்ஃபில்ஸை வீழ்த்தினாா். 8-ஆம் இடத்திலிருக்கும் ஸ்பெயினின் அலெக்ஸாண்ட்ரோ டேவிடோவிச் 6-3, 4-6, 6-1 என பல்கேரியாவின் ஃபாபியான் மரோஸானை வென்றாா்.

இதர ஆட்டங்களில் இத்தாலியின் லொரென்ஸோ முசெட்டி தோல்வி காண, ஆஸ்திரேலியாவின் கிறிஸ்டோபா் ஓ’ கானெல் வெற்றி பெற்றாா்.

Advertisement