செய்திகள்

இவர் டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற வந்தவராக இருக்கலாம்: ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அபார பந்துவீச்சு திறமையை வெளிப்படுத்திய மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஷமர் ஜோசப்பை ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஸ்டீவ் வாக் பாராட்டியுள்ளார். 

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அபார பந்துவீச்சு திறமையை வெளிப்படுத்திய மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஷமர் ஜோசப்பை ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஸ்டீவ் வாக் பாராட்டியுள்ளார். 

ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் மேற்கிந்தியத் தீவுகள் பெறும் முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும். இந்தப் போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஷமர் ஜோசப் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார். அறிமுக டெஸ்ட்டில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவருக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அபார பந்துவீச்சு திறமையை வெளிப்படுத்திய மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஷமர் ஜோசப்பை ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஸ்டீவ் வாக் பாராட்டியுள்ளார். 

இது தொடர்பாக ஸ்டீவ் வாக் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருப்பதாவது: டெஸ்ட் கிரிக்கெட் போன்று சிறந்தது ஒன்றுமில்லை. ஷமர் ஜோசப் டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற வந்தவராக இருக்கலாம். மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஷமர் ஜோசப் தனி ஒருவராக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி கிரிக்கெட் ஆதரவாளர்களுக்கு அதன் மீதான அன்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளார் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT