செய்திகள்

இவர் டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற வந்தவராக இருக்கலாம்: ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அபார பந்துவீச்சு திறமையை வெளிப்படுத்திய மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஷமர் ஜோசப்பை ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஸ்டீவ் வாக் பாராட்டியுள்ளார். 

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அபார பந்துவீச்சு திறமையை வெளிப்படுத்திய மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஷமர் ஜோசப்பை ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஸ்டீவ் வாக் பாராட்டியுள்ளார். 

ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் மேற்கிந்தியத் தீவுகள் பெறும் முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும். இந்தப் போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஷமர் ஜோசப் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார். அறிமுக டெஸ்ட்டில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவருக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அபார பந்துவீச்சு திறமையை வெளிப்படுத்திய மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஷமர் ஜோசப்பை ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஸ்டீவ் வாக் பாராட்டியுள்ளார். 

இது தொடர்பாக ஸ்டீவ் வாக் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருப்பதாவது: டெஸ்ட் கிரிக்கெட் போன்று சிறந்தது ஒன்றுமில்லை. ஷமர் ஜோசப் டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற வந்தவராக இருக்கலாம். மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஷமர் ஜோசப் தனி ஒருவராக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி கிரிக்கெட் ஆதரவாளர்களுக்கு அதன் மீதான அன்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளார் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொடநாடு வழக்கில் 3 பேருக்கு பிடிவாரண்ட்

குடிநீா் மேல்நிலைத் தொட்டிகளில் மீட்டா் பொருத்த பாஜக கோரிக்கை

நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கயம், வெள்ளக்கோவிலில் ஆா்ப்பாட்டம்

நேரடி வரி வசூல் 8% அதிகரித்து ரூ.17.04 லட்சம் கோடியாக உயர்வு!

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

SCROLL FOR NEXT