செய்திகள்

இவர்களால் இந்தியாவுக்கு எதிரான வெற்றி சாத்தியமானது: பென் ஸ்டோக்ஸ்

DIN

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதற்கு அணியில் இடம்பிடித்துள்ளே சுழற்பந்துவீச்சாளர்களே காரணம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ஜியோ சினிமாவில் அவர் பேசியதாவது: சில நேரங்களில் அனுபவமற்ற அறிமுக வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் இருப்பது அணிக்கு பலம் சேர்க்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அதுவும் இந்திய ஆடுகளங்களில் அனுபவம் வாய்ந்தவர்கள் இருப்பது அணிக்கு மிகவும் முக்கியம். இந்தியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ள சுழற்பந்துவீச்சாளர்கள் இந்தியாவை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தினார்கள்.

சுழற்பந்துவீச்சாளர்கள் எனக் கூறுவதைக் காட்டிலும் அவர்களுக்குள் இருக்கும் திறமையை புரிந்துகொண்டு அவர்கள் சுதந்திரமாக செயல்பட வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். பந்துவீச்சாளராக ஒருவரது வேலை விக்கெட்டுகளை எடுப்பது. பேட்ஸ்மேனாக ஒருவரது வேலை அணிக்காக ரன்களை குவிப்பது. அதிலிருந்து அதிகமாக எதிர்பார்த்தால் அது நிலைமையை கடினமாக மாற்றிவிடும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT