முகப்பு
செய்திகள்

கடைசி டி20: மழையால் காசு சுண்டுவதில் தாமதம்!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டிக்கு காசு சுண்டுவது மழையினால் தாமதமாகியுள்ளது.

Updated On : 30 ஜூலை, 2024 at 2:31 PM
- படம் | பிசிசிஐ
பகிர்:

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டிக்கு காசு சுண்டுவது மழையினால் தாமதமாகியுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (ஜூலை 30) நடைபெறுகிறது.

போட்டி நடைபெறும் மைதனாத்தில் மழை பெய்து வருவதால், இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டிக்கு காசு சுண்டுவது தாமதமாகியுள்ளது. விரைவில் காசு சுண்டப்பட்டு ஓவர்கள் குறைக்கப்படாமல் போட்டி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை இந்திய அணி ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.