FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பந்துவீச்சாளர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க முன்னாள் இந்திய வீரர் கூறுவதென்ன?

பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக கிரிக்கெட் இருந்தால் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இளைஞர்கள் பலரும் பந்துவீச்சில் பெரிதாக ஆர்வம் காட்ட மாட்டார்கள்.

Updated On : 17 மே 2024, 3:47 pm IST
கோப்புப்படம்
பகிர்:

பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக கிரிக்கெட் இருந்தால் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இளைஞர்கள் பலரும் பந்துவீச்சில் பெரிதாக ஆர்வம் காட்ட மாட்டார்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 250 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோர் 8 முறை குவிக்கப்பட்டுள்ளது. ஆடுகளங்களும், இம்பாக்ட் பிளேயர் விதிமுறையும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அதன்காரணமாக ஒவ்வொரு போட்டியிலும் அதிகமான ரன்கள் குவிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், பந்துவீச்சாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால், ஐபிஎல் தொடரில் மைதானங்களின் எல்லைக் கோட்டினை (பவுண்டரி) அதிகப்படுத்த வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

அனில் கும்ப்ளே (கோப்புப்படம்)

இது தொடர்பாக ஜியோ சினிமாவில் அவர் பேசியதாவது: நடப்பு ஐபிஎல் தொடர் பந்துவீச்சாளர்களுக்கு மிகுந்த சவாலானதாக உள்ளது. அதிலும் ஐபிஎல் தொடரின் முதல் பாதி மிகுந்த கடினமானதாக இருந்தது. ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் ஒவ்வொரு ஆடுகளங்களின் எல்லைக்கோடுகளும் அதிகப்படுத்த வேண்டும் என உறுதியாக நம்புகிறேன். இதனால் மைதானத்தில் உள்ள சில இருக்கைகள் குறையும் என்பது தெரியும். இருந்தாலும் பரவாயில்லை.

பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டுக்குமே ஏற்றதாக போட்டி இருக்க வேண்டும். பேட்டிங்குக்கு சாதகமான சூழல் நீடித்தால், இளைஞர்கள் பந்துவீச்சாளராக உருவாக தயாராக இருக்க மாட்டார்கள். அனைவரும் பேட்ஸ்மேன் ஆக வேண்டும் என விரும்புவார்கள். ஆட்டத்துக்கு பந்துவீச்சாளர்களும் முக்கியம். பந்துவீச்சாளர்கள் எண்ணிக்கை சமமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த விஷயத்துக்கு தீர்வு காணப்படும் என நம்புகிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments