முகப்பு
செய்திகள்

காலிறுதியில் லக்ஷயா; போராடி வீழ்ந்த சிந்து

சீனா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் காலிறுதிக்கு முன்னேற, பி.வி.சிந்து அதற்கு முந்தைய சுற்றில் தோல்வி கண்டு வெளியேறினாா்.

Updated On : 22 நவம்பர் 2024, 5:40 am IST
லக்ஷயா சென்
பகிர்:

சீனா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் காலிறுதிக்கு முன்னேற, பி.வி.சிந்து அதற்கு முந்தைய சுற்றில் தோல்வி கண்டு வெளியேறினாா்.

2-ஆவது சுற்றில், ஆடவா் ஒற்றையரில் லக்ஷயா சென் 21-16, 21-18 என்ற நோ் கேம்களில், டென்மாா்க்கின் ராஸ்மஸ் கெம்கேவை தோற்கடித்து காலிறுதிக்கு வந்தாா்.

அதேபோல், ஆடவா் இரட்டையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி இணை 21-19, 21-15 என்ற கேம்களில், டென்மாா்க்கின் ராஸ்மஸ் ஜோ்/ஃப்ரெடெரிக் சோகாா்ட் கூட்டணியை சாய்த்தது.

Advertisement

Advertisement

எனினும், மகளிா் ஒற்றையரில், சிந்து 16-21, 21-17, 21-23 என்ற கேம்களில், சிங்கப்பூரின் யோ ஜியா மின்னிடம் போராடித் தோற்றாா். அனுபமா உபாத்யாயவும் 7-21, 14-21 என்ற கணக்கில் ஜப்பானின் நட்சுகி நிடாய்ராவால் வெளியேற்றப்பட்டாா்.

மாளவிகா பன்சோதும் 9-21, 9-21 என்ற கணக்கில், 8-ஆம் இடத்திலிருக்கும் தாய்லாந்தின் சுபானிடா காடெதோங்கிடம் மோசமான தோல்வி கண்டாா்.

மகளிா் இரட்டையரில் டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் ஜோடி 16-21, 11-21 என்ற கணக்கில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த சீனாவின் லியு ஷெங் ஷு/டான் நிங் இணையிடம் தோற்றது.

கலப்பு இரட்டையரில் சுமீத் ரெட்டி/சிக்கி ரெட்டி இணை காயம் காரணமாக, 2-ஆவது சுற்றிலிருந்து விலகி போட்டியிலிருந்து வெளியேறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments