FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சின்னர் அசத்தல்: 3ஆவது முறையாக டேவிஸ் கோப்பையை வென்ற இத்தாலி!

ஆடவா் அணிகளுக்கான டேவிஸ் கோப்பையை இத்தாலி அணி 3ஆவது முறையாக வென்று அசத்தியது.

Updated On : 25 நவம்பர் 2024, 5:07 am IST
டேவிஸ் கோப்பையை தூக்கி கொண்டாடிய யானிக் சின்னருடன் இத்தாலி வீரர்கள். - படம்: எக்ஸ் / டேவிஸ் கோப்பை
பகிர்:

ஆடவா் அணிகளுக்கான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் இத்தாலி 2-0 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது.

இறுதிப் போட்டியின் முதல் ஆட்டத்தில், இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி 6-4, 6-2 என்ற செட்களில் நெதர்லாந்தின் வான் டெ ஜாண்ட்ஷுல்பினை வீழ்த்தினார். இவர் காலிறுதியில் ரஃபேல் நடாலை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்றுமொரு இறுதி ஆட்டத்தில் உலகின் நம்பா் 1 வீரரான யானிக் சின்னா் நெதர்லாந்தின் டாலோன் கிரீஸ்பூக்கரை 7-6(2), 6-2 என்ற செட்களில் தோற்கடித்தார்.

Advertisement

Advertisement

கடந்த 104 ஆண்டுகளாக முயன்று வரும் நெதா்லாந்து இந்தக் கட்டத்துக்கு வந்தது இதுவே முதல் முறையாகும். கடந்த 11 ஆண்டுகளில் இத்தாலி அடுத்தடுத்து டேவிஸ் கோப்பை வென்ற முதல் அணியாக உருவெடுத்துள்ளது.

இதுவரை மொத்தம் 3 முறை (1976, 2023, 2024) இத்தாலி அணி கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் மகளிா் அணிகளுக்கான பில்லி ஜீன் கிங் கோப்பை போட்டியில் இத்தாலி சாம்பியனாகியிருந்ததும் நினைவுகூரத்தக்கது.

இந்தாண்டு 2 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றது, டென்னிஸ் தரவரிசையில் நம்.1 இடத்தில் நீடிப்பது, ஏடிபி ஃபைனல்ஸ் என அனைத்தும் இந்தாண்டு சிறப்பான ஆண்டாக சின்னருக்கு அமைந்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments