பாலியல் குற்றச்சாட்டில் பாக். கிரிக்கெட் வீரர் கைது!
பாகிஸ்தான் வம்சாவளி பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி இங்கிலாந்தில் கைது
இங்கிலாந்தில் பாகிஸ்தான் வம்சாவளி பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி கைது செய்யப்பட்டார்.
பாகிஸ்தானின் ஷாஹீன்ஸ் அணியினர் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த நிலையில், கடந்த ஜூலை 24 ஆம் தேதியில் பிரிட்டானியா மான்செஸ்டர் பகுதியில் பாகிஸ்தான் வம்சாவளிப் பெண்ணிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், திங்கள்கிழமையில் (ஆகஸ்ட் 4) பெக்கன்ஹாம் திடலில் விளையாடிக் கொண்டிருந்த ஹைதர் அலியை மான்செஸ்டர் காவல்துறையினர் கைது செய்தனர்.
Advertisement
Advertisement
இருப்பினும், அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும், விசாரணைக்காக 2 வாரங்களுக்கு மான்செஸ்டரிலேயே இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே, விசாரணையில் இருந்து ஹைதர் அலியின் பெயர் நீக்கப்படும் வரையில் அவரை அணியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
Pakistan Cricketer Arrested In UK Over Rape Allegations, Later Released On Bail
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.