முகப்பு
செய்திகள்

யுனைடெட் அணிக்கு வீழ்ச்சியா? ரூ. 470 கோடிக்கு செல்ஸி அணியில் இணைந்த கர்னாச்சோ!

மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நட்சத்திர வீரர் கர்னாச்சோ விலகியது குறித்து...

Updated On : 31 ஆகஸ்ட் 2025, 12:57 pm IST
அலெஜான்ட்ரோ கர்னாச்சோ - படம்: எக்ஸ் / செல்ஸி எஃப்சி.
பகிர்:

மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நட்சத்திர வீரர் அலெஜான்ட்ரோ கர்னாச்சோ (21 வயது) செல்ஸி அணிக்கு நிரந்தரமாக மாறியுள்ளார்.

யுனைடெட் அணியிலிருந்து விலகிய இவருக்கு சுமார் 40 மில்லியன் பவுன்ட்ஸ் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.476 கோடி) கிடைத்துள்ளது.

ரூ. 470 கோடிக்கு செல்ஸி அணியில் இணைந்த கர்னாச்சோ!

Advertisement

Advertisement

ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த 21 வயது இளம் கால்பந்து வீரர் அலெஜான்ட்ரோ கர்னாச்சோ மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி வந்தார்.

இளம் வயதிலிருந்தே யுனைடெட் அணியில் இருந்த இவர் தற்போது ரூ.476 கோடிக்கு (54.4 மில்லியன் அமெரிக்க டாலர்) ஊதியத்துக்கு செல்ஸி அணிக்கு சென்றுள்ளார்.

யூரோப் லீக் இறுதிப் போட்டியில் யுனைடெட் அணி 1-0 என தோற்றது. அதுதான் இவரது யுனைடெட் அணியில் கடைசி போட்டியாக இருந்தது.

யுனைடெட் அணிக்கு வீழ்ச்சியா?

சமீபத்தில் செல்ஸி அணி கிளப் உலகக் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

கர்னாச்சோவை விற்றதால் யுனைடெட் அணிக்கு லாபம் என்றே கூறப்படுகிறது. யுனைடெட் அணியிலிருந்து விலகியவர்கள் மற்ற அணிகளுக்குச் சென்றால் தீயாக விளையாடுவது வழக்கமாக இருக்கிறது.

கடந்த சீசனில் ஆண்டணி லலீகா தொடரில் கலக்கியது குறிப்பிடத்தக்கது.

summary

Chelsea signed Argentina international Alejandro Garnacho from Manchester United for a reported 40 million pounds ($54 million), adding more competition for the two winger spots.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments