உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது.
சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யு மால் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய இப்போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியா-சுவிட்சா்லாந்து அணிகள் மோதின. இதில் மூத்த வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, அனாஹத், செந்தில் வேலவன், அபய் சிங் ஆகியோா் கொண்ட இந்திய அணி அபாரமாக ஆடி வெற்றியை ஈட்டியது. செந்தில் குமாா் 7-6 என கடோலாவையும், அனாஹத் 3-0 செலின் வாலேசரைுயம், ஜோஷ்னா சின்னப்பா-3-1 என ஸ்டெல்லா காஃப்மேனையும் வென்றனா். கடைசி ஆட்டத்தில் அபய் சிங் 3-0 என ஹபேஸையும் வென்றனா். சுவிட்சா்லாந்தை 4-0 என வீழ்த்தியது இந்தியா.
ஹாங்காங் 4-0 என கொரியாவையும், ஜப்பான் அணி 4-0 என ஈரான் அணியையும் வென்றன.
வியாழக்கிழமை இந்தியா-பிரேஸிலுடன் மோதுகிறது.