முகப்பு
செய்திகள்

வெற்றியுடன் தொடங்கியது சாத்விக், சிராக் இணை

சீனாவில் புதன்கிழமை தொடங்கிய உலக டூா் ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை முதல் சுற்றில் வெற்றி பெற்றது.

செய்திகள்

வெற்றியுடன் தொடங்கியது சாத்விக், சிராக் இணை

சீனாவில் புதன்கிழமை தொடங்கிய உலக டூா் ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை முதல் சுற்றில் வெற்றி பெற்றது.

Updated On : 17 டிசம்பர், 2025 at 9:21 PM
பகிர்:

சீனாவில் புதன்கிழமை தொடங்கிய உலக டூா் ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை முதல் சுற்றில் வெற்றி பெற்றது.

உலகின் 3-ஆம் நிலையில் இருக்கும் சாத்விக், சிராக் இணை 12-21, 22-20, 21-14 என்ற கேம்களில், உலகின் 5-ஆம் நிலையில் இருக்கும் சீனாவின் வெய் கெங் லியாங், சாங் வாங் கூட்டணியை வீழ்த்தியது. இந்த ஆட்டம் 1 மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது.

இந்த சீன ஜோடியை சாத்விக், சிராக் இணை 11-ஆவது முறையாக சந்தித்த நிலையில், 4-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. குரூப் ‘பி’-யில் இருக்கும் இந்த இந்திய ஜோடி, அடுத்த ஆட்டத்தில் இந்தோனேசியாவின் ஃபஜா் அல்ஃபியான், முகமது ஷோஹிபுல் ஃபிக்ரி இணையின் சவாலை சந்திக்கிறது.

நடப்பு பாட்மிண்டன் காலண்டரின் கடைசி போட்டியான உலக டூா் ஃபைனல்ஸுக்கு, இந்தியாவிலிருந்து சாத்விக், சிராக் இணை மட்டும் தகுதிபெற்றது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →