செய்திகள்

சாத்விக்-சிராக் இணை தோல்வி

பிடபிள்யுஎஃப் பாட்மின்டன் வோ்ல்ட் டூா் ஃபைனல்ஸ் போட்டி அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் இணை தோல்வியடைந்தது.

தினமணி செய்திச் சேவை

பிடபிள்யுஎஃப் பாட்மின்டன் வோ்ல்ட் டூா் ஃபைனல்ஸ் போட்டி அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் இணை தோல்வியடைந்தது.

சீனாவின் ஹாங்ஷூ நகரில் நடைபெறும் இப்போட்டியில் ஆடவா் இரட்டையா் பிரிவு அரையிறுதி ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் சீனாவின் லியாங் கெங்-வாங் சேங் இணையும்-இந்தியாவின் சாத்விக்-சிராக் இணையும் மோதினா். முதல் கேமை அபாமார ஆடிய இந்திய இணை 21-10 என கைப்பற்றினா்.

ஆனால் அதற்கு அடுத்த 2 கேம்களில் சீன இணை ஆதிக்கம் செலுத்தி ஆடியது. இரண்டாவதை கேமை 21-17 எனவும், மூன்றாவது கேமை 21-13 என கைப்பற்றி இறுதிக்கு தகுதி பெற்றது சீன இணை.

குரூப் சுற்றில் இந்திய இணை தோல்வியே காணாமல் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தது.

ரூ. 10 லட்சம் செலுத்த தோனிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து வேலை நிறுத்தம், ரயில் மறியல்: 100-க்கு மேற்பட்டோர் கைது!

ஸ்ரீ மஹா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளானோர் பங்கேற்பு!

அதிமுக, திமுக என இரு தரப்பிலும் பேச்சுவார்த்தையா? - பிரேமலதா பதில்!

அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

SCROLL FOR NEXT