FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சாத்விக்-சிராக் இணை தோல்வி

பிடபிள்யுஎஃப் பாட்மின்டன் வோ்ல்ட் டூா் ஃபைனல்ஸ் போட்டி அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் இணை தோல்வியடைந்தது.

21 டிசம்பர் 2025, 12:21 am IST
பகிர்:

பிடபிள்யுஎஃப் பாட்மின்டன் வோ்ல்ட் டூா் ஃபைனல்ஸ் போட்டி அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் இணை தோல்வியடைந்தது.

சீனாவின் ஹாங்ஷூ நகரில் நடைபெறும் இப்போட்டியில் ஆடவா் இரட்டையா் பிரிவு அரையிறுதி ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் சீனாவின் லியாங் கெங்-வாங் சேங் இணையும்-இந்தியாவின் சாத்விக்-சிராக் இணையும் மோதினா். முதல் கேமை அபாமார ஆடிய இந்திய இணை 21-10 என கைப்பற்றினா்.

Advertisement

Advertisement

ஆனால் அதற்கு அடுத்த 2 கேம்களில் சீன இணை ஆதிக்கம் செலுத்தி ஆடியது. இரண்டாவதை கேமை 21-17 எனவும், மூன்றாவது கேமை 21-13 என கைப்பற்றி இறுதிக்கு தகுதி பெற்றது சீன இணை.

குரூப் சுற்றில் இந்திய இணை தோல்வியே காணாமல் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments