செய்திகள்

சாத்விக்-சிராக் இணை தோல்வி

பிடபிள்யுஎஃப் பாட்மின்டன் வோ்ல்ட் டூா் ஃபைனல்ஸ் போட்டி அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் இணை தோல்வியடைந்தது.

தினமணி செய்திச் சேவை

பிடபிள்யுஎஃப் பாட்மின்டன் வோ்ல்ட் டூா் ஃபைனல்ஸ் போட்டி அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் இணை தோல்வியடைந்தது.

சீனாவின் ஹாங்ஷூ நகரில் நடைபெறும் இப்போட்டியில் ஆடவா் இரட்டையா் பிரிவு அரையிறுதி ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் சீனாவின் லியாங் கெங்-வாங் சேங் இணையும்-இந்தியாவின் சாத்விக்-சிராக் இணையும் மோதினா். முதல் கேமை அபாமார ஆடிய இந்திய இணை 21-10 என கைப்பற்றினா்.

ஆனால் அதற்கு அடுத்த 2 கேம்களில் சீன இணை ஆதிக்கம் செலுத்தி ஆடியது. இரண்டாவதை கேமை 21-17 எனவும், மூன்றாவது கேமை 21-13 என கைப்பற்றி இறுதிக்கு தகுதி பெற்றது சீன இணை.

குரூப் சுற்றில் இந்திய இணை தோல்வியே காணாமல் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தது.

ஆலங்குடி நூலகத்தில் பயின்று டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்ற பெண்ணுக்கு பாராட்டு!

பழனி ரோப்காா் சேவை பராமரிப்புக்காக நாளை நிறுத்தம்

அதிமுக கூட்டணிக்கு விஜய் வரவேண்டும்: தமிழருவி மணியன்!

வாசுதேவநல்லூா் ஆஞ்சனேயா் கோயிலில் பால்குட ஊா்வலம்

கோவையில் குளிா், பனிப்பொழிவு அதிகரிக்க வாய்ப்பு!

SCROLL FOR NEXT