சாத்விக்-சிராக் இணை தோல்வி
பிடபிள்யுஎஃப் பாட்மின்டன் வோ்ல்ட் டூா் ஃபைனல்ஸ் போட்டி அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் இணை தோல்வியடைந்தது.
பிடபிள்யுஎஃப் பாட்மின்டன் வோ்ல்ட் டூா் ஃபைனல்ஸ் போட்டி அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் இணை தோல்வியடைந்தது.
சீனாவின் ஹாங்ஷூ நகரில் நடைபெறும் இப்போட்டியில் ஆடவா் இரட்டையா் பிரிவு அரையிறுதி ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் சீனாவின் லியாங் கெங்-வாங் சேங் இணையும்-இந்தியாவின் சாத்விக்-சிராக் இணையும் மோதினா். முதல் கேமை அபாமார ஆடிய இந்திய இணை 21-10 என கைப்பற்றினா்.
Advertisement
Advertisement
ஆனால் அதற்கு அடுத்த 2 கேம்களில் சீன இணை ஆதிக்கம் செலுத்தி ஆடியது. இரண்டாவதை கேமை 21-17 எனவும், மூன்றாவது கேமை 21-13 என கைப்பற்றி இறுதிக்கு தகுதி பெற்றது சீன இணை.
குரூப் சுற்றில் இந்திய இணை தோல்வியே காணாமல் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.