FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஃப்ரீஸ்டைல் செஸ் கிரான்ட்ஸ்லாம்: காலிறுதியில் குகேஷ் தோல்வி!

நேற்று தகுதிச் சுற்றில் தோல்வி அடைந்த நிலையில், இன்றும் தோல்வியைத் தழுவினார்.

Updated On : 10 பிப்ரவரி 2025, 10:06 pm IST
ஃபேபியானோ கருவானா உடன் குகேஷ் - படம் | யூடியூப் நேரலை
பகிர்:

ஃப்ரீஸ்டைல் செஸ் கிரான்ட்ஸ்லாம் போட்டியின் காலிறுதிச் சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

நேற்று தகுதிச் சுற்றில் தோல்வி அடைந்த நிலையில், இன்றும் தோல்வியைத் தழுவினார். இப்போட்டியில் அடுத்தடுத்து தோல்வி அடைந்ததால் டாப் 4 போட்டியாளர்கள் பட்டியல் இருந்து சறுக்கினார்.

ஃப்ரீஸ்டைல் செஸ் கிரான்ட்ஸ்லாம் போட்டி ஜெர்மனியின் வெய்சன்ஹாஸ் பகுதியில் நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

இதில் இன்று (பிப். 10) நடைபெற்ற காலிறுதிச் சுற்றில் இந்திய கிரான்ட் மாஸ்டர் டி. குகேஷ், அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானா உடன் மோதினார்.

ஞாயிற்றுக்கிழமை (பிப். 9) நடைபெற்ற தகுதிச் சுற்றில் கருவானா உடன் வெள்ளை நிறக் காய்களுடன் ஆடிய குகேஷ் தோல்வியைத் தழுவினார். இதனால் இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் குகேஷ் களமிறங்கினார்.

விறுவிறுப்பாகத் தொடங்கிய இப்போட்டியின் 6வது நகர்த்தலில் குகேஷ் பின்னடைவைச் சந்தித்தார்.

தொடர்ந்து சமநிலையை நோக்கி ஆட்டம் சென்றுகொண்டிருக்கையில், மீண்டும் 17வது நகர்த்தலில் சறுக்கினார் குகேஷ். இதனால் காலிறுதிப் போட்டியிலும் தோல்வி அடைந்தார்.

காலிறுதிப் போட்டியில் தோற்றதன் மூலம் டாப் 4 வீரர்கள் பட்டியலில் இருந்து 8வது இடத்துக்கு வந்துள்ளார் குகேஷ்.

இதையும் படிக்க | அறிமுக ஆட்டத்தில் 150 ரன்கள்! சாதனை புரிந்த தென்னாப்பிரிக்க வீரர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments