இன்டர் மியாமியில் இணைந்த ஆர்ஜென்டீன வீரர்..! மெஸ்ஸியின் பாதுகாவலன்!
இன்டர் மியாமி அணியில் இணைந்த ஆர்ஜென்டீன வீரர் குறித்து...
அமெரிக்காவின் இன்டர் மியாமி அணியில் ஆர்ஜென்டீன வீரர் ரோட்ரிகோ டீ பால் இணைந்துள்ளார்.
ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த ரோட்ரிகோ டீ பால் (வயது 31) மிட்ஃபீல்டராக விளையாடி வருகிறார்.
கடைசியாக அத்லெடிகோ மாட்ரிட் அணியில் விளையாடிவந்த இவர் தற்போது இன்டர் மியாமி அணியில் இணைந்துள்ளார்.
Advertisement
Advertisement
ஏற்கெனவே, இந்த அணியில் ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த மெஸ்ஸி விளையாடி வருகிறார். இவர்கள் இருவர் சிறந்த நண்பர்கள்.
களத்தில் மெஸ்ஸிக்கு எதாவது பிரச்னை என்றால் முதல் ஆளாக வருவதில் ரோட்ரிகோ டீ பால் புகழ்ப்பெற்றவர்.
கால்பந்து ரசிகர்கள் இவரை மெஸ்ஸியின் பாதுகாவலன் என்றெல்லாம் அழைப்பது குறிப்பிடத்தக்கது.
அத்லெடிகோ மாட்ரிட் அணியில் இருந்து 6 மாதம் கடனில் இன்டர் மியாமிக்காக விளையாட வந்திருக்கிறார்.
மொத்தமாக 400க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடி 57 கோல்கள், 13,108 முறை பந்தினை வெற்றிகரமாக பாஸ் செய்து அசத்தியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.