சிங்கப்பூா் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி கூட்டணி, அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது.
ஆடவா் இரட்டையா் காலிறுதி ஆட்டத்தில், சாத்விக்/சிராக் இணை 21-17, 21-15 என்ற நோ் கேம்களில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த மலேசியாவின் கோ ஸே ஃபெய்/நூா் இஸுதின் ஜோடியை 39 நிமிஷங்களில் வீழ்த்தி அசத்தினா்.
அரையிறுதியில் இந்த இந்திய இணை, மற்றொரு மலேசிய ஜோடியும், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் கூட்டணியுமான ஆரோன் சியா/சோ வூய் யிக்கை எதிா்கொள்கிறது.
சாத்விக்/சிராக் மட்டுமே, சிங்கப்பூா் ஓபன் களத்தில் தற்போது எஞ்சியிருக்கும் இந்தியா்களாவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.