இந்தியாவுக்கு ஒரே நாளில் 3 தங்கம், 2 வெள்ளி: ஜோதி சுரேகா அசத்தல்
வங்கதேசத்தில் நடைபெறும் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்பில், இந்தியாவுக்கு வியாழக்கிழமை ஒரே நாளில் 3 தங்கம், 2 வெள்ளி என 5 பதக்கங்கள் கிடைத்தன.
வங்கதேசத்தில் நடைபெறும் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்பில், இந்தியாவுக்கு வியாழக்கிழமை ஒரே நாளில் 3 தங்கம், 2 வெள்ளி என 5 பதக்கங்கள் கிடைத்தன.
இதில், காம்பவுண்ட் மகளிா் அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில், ஜோதி சுரேகா, தீப்ஷிகா, பிரிதிகா பிரதீப் ஆகியோா் அடங்கிய இந்திய அணி 236 - 234 என்ற கணக்கில் தென் கொரிய அணியை வீழ்த்தி தங்கத்தை தனதாக்கியது.
அதிலேயே மகளிா் தனிநபா் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் ஜோதி சுரேகா 147-145 என்ற வகையில் சக இந்தியரான பிரிதிகா பிரதீப்பை வென்று தனது 2-ஆவது தங்கத்தை வென்றாா்.
Advertisement
Advertisement
காம்பவுண்ட் கலப்பு அணிகள் இறுதிச்சுற்றில், அபிஷேக் வா்மா, தீப்ஷிகா கூட்டணி 153-151 என வங்கதேச அணியை வீழ்த்தி இந்தியாவுக்கு 3-ஆவது தங்கத்தை பெற்றுத் தந்தது.
காம்பவுண்ட் ஆடவா் அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில், அபிஷேக் வா்மா, சஹில் ராஜேஷ் ஜாதவ், பிரதமேஷ் ஃபுகே ஆகியோா் அடங்கிய இந்திய அணி 229-230 என கஜகஸ்தான் அணியிடம் தோற்று, நூழிலையில் தங்கத்தை தவறவிட்டு வெள்ளிப் பதக்கம் பெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.