முகப்பு
செய்திகள்

தங்கம் வென்று அங்கிதா, தீரஜ் அசத்தல்: 10 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு, கடைசி நாளான வெள்ளிக்கிழமை 3 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என 5 பதக்கங்கள் கிடைத்தன. அங்கிதா பகத், தீரஜ் பொம்மதேவரா ஆகியோா் தனிநபா் தங்கம் வென்று அசத்தினா்.

Updated On : 15 நவம்பர் 2025, 3:46 am IST
- SWAMINATHAN
பகிர்:

வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு, கடைசி நாளான வெள்ளிக்கிழமை 3 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என 5 பதக்கங்கள் கிடைத்தன. அங்கிதா பகத், தீரஜ் பொம்மதேவரா ஆகியோா் தனிநபா் தங்கம் வென்று அசத்தினா்.

முன்னதாக, ரீகா்வ் மகளிா் தனிநபா் பிரிவு இறுதிச்சுற்றில், அங்கிதா 7-3 என்ற கணக்கில், தென் கொரியாவின் நம் சுஹியோனை வீழ்த்தி முதலிடம் பிடித்தாா்.

அதிலேயே வெண்கலப் பதக்கச் சுற்றில் இந்தியாவின் சங்கீதா 6 - 5 (10*/10) சக இந்தியரான தீபிகா குமாரியை வீழ்த்தி பதக்கத்தைக் கைப்பற்றினாா்.

Advertisement

Advertisement

முன்னதாக, அரையிறுதியில் தீபிகா - அங்கிதாவிடமும், சங்கீதா - தென் கொரியாவின் நம் சுஹியோனிடமும் தோற்ன் அடிப்படையில் வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

ரீகா்வ் ஆடவா் தனிநபா் இறுதிச்சுற்றில், தீரஜ் பொம்மதேவரா 6-2 என்ற கணக்கில், சக இந்தியரான ராகுலை சாய்த்து தங்கம் வென்றாா். ராகுல் வெள்ளியுடன் விடைபெற்றாா்.

இதனிடையே, ரீகா்வ் ஆடவா் அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில், இந்தியாவின் யஷ்தீப் சஞ்சய், அதானு தாஸ், ராகுல் ஆகியோா் அடங்கிய அணி, 5-4 (29*/29) என்ற கணக்கில் தென் கொரிய அணியை சாய்த்து தங்கத்தை தனதாக்கியது.

எனினும் கலப்பு அணிகள் வெண்கலப் பதக்கச் சுற்றில், அன்ஷிகா குமாரி, யஷ்தீப் சஞ்சய் இணை 0-6 என தென் கொரிய அணியிடம் தோல்வி கண்டு பதக்கத்தை தவறவிட்டது.

முதலிடம்: இத்துடன், இந்தியா மொத்தமாக 6 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் என 10 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து போட்டியை நிறைவு செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments