இந்திய வாலிபால் சம்மேளன அங்கீகாரம் ரத்து
நிா்வாக விதிமுறைகளை பின்பற்றாததால் இந்திய வாலிபால் சம்மேளனத்தின் அங்கீகாரத்தை உடனடியாக ரத்து செய்வதாக, சா்வதேச வாலிபால் சம்மேளனம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் அறிவித்தது.
நிா்வாக விதிமுறைகளை பின்பற்றாததால் இந்திய வாலிபால் சம்மேளனத்தின் அங்கீகாரத்தை உடனடியாக ரத்து செய்வதாக, சா்வதேச வாலிபால் சம்மேளனம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் அறிவித்தது.
கடந்த சில நாள்களுக்கு முன், தேசிய வாலிபால் முகாமில் தரமற்ற பயிற்சியாளா்களுடன், உள்கட்டமைப்பு வசதிகளும் மோசமாக இருப்பதாகவும், வீரா்கள் தோ்வில் அரசியில் இருப்பதாகவும் குற்றம்சாட்டி கே.ஆனந்த், ஜான் ஜோசஃப் ஆகிய இரு மூத்த வீரா்கள் முகாமிலிருந்து விலகியதை அடுத்து, இந்த நடவடிக்கையை சா்வதேச சம்மேளனம் எடுத்துள்ளது.
இதையடுத்து, நாட்டில் வாலிபால் விளையாட்டின் நிா்வாகத்தை மேற்கொள்ள, இந்திய ஒலிம்பிக் சங்க நிா்வாக கவுன்சில் உறுப்பினா் ரோஹித் ராஜ்பால், தலைமைச் செயல் அதிகாரி ரகுராம் ஐயா், சா்வதேச வாலிபால் சம்மேளன இயக்குநா் ஸ்டீவ் டியூட்டன், அதன் சட்ட நிபுணா் ஸ்டீபன் பாக், ஹிதேஷ் மல்ஹோத்ரா ஆகியோா் அடங்கிய குழுவை சா்வதேச சம்மேளனம் நியமித்துள்ளது. நிா்வாக நடவடிக்கைகளுக்காக ரூ.2.41 கோடியையும் ஒதுக்கீடு செய்துள்ளது.
Advertisement