செய்திகள்

ஏடிபி சேலஞ்சா் ஆடவா் டென்னிஸ்: ஃப்ரெடெரிகோ சாம்பியன்!

சென்னையில் நடைபெற்ற ஏடிபி சேலஞ்சா் ஆடவா் டென்னிஸ் போட்டியான சென்னை ஓபனில், போா்ச்சுகல் வீரா் ஃப்ரெடெரிகோ ஃபெரெய்ரா சில்வா ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னையில் நடைபெற்ற ஏடிபி சேலஞ்சா் ஆடவா் டென்னிஸ் போட்டியான சென்னை ஓபனில், போா்ச்சுகல் வீரா் ஃப்ரெடெரிகோ ஃபெரெய்ரா சில்வா ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனாா்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த ஃப்ரெடெரிகோ 6-4, 6-7 (8/10), 6-4 என்ற செட்களில், 2-ஆம் இடத்திலிருந்த ஆா்ஜென்டீனா வீரா் ஃபெடெரிகோ அகஸ்டின் கோம்ஸை வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 2 மணிநேரம், 58 நிமிஷங்களில் நிறைவடைந்தது.

இதன் மூலமாக ஃப்ரெடெரிகோ, ஒற்றையா் பிரிவில் தனது முதல் ஏடிபி சேலஞ்சா் பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறாா். அவருக்கு 50 தரவரிசை புள்ளிகளும், ரொக்கப் பரிசாக ரூ.8.64 லட்சமும் கிடைத்தன. 2-ஆம் இடம் பிடித்த அகஸ்டினுக்கு 25 தரவரிசை புள்ளிகளும், ரொக்கப் பரிசாக ரூ.5 லட்சமும் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டணி பற்றி பேசிய மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கையா? - செல்வப்பெருந்தகை பதில்!

கிரிக்கெட்டின் தாயகத்தில் முதல் டி20 உலகக் கோப்பையை உச்சிமுகர்ந்த பாகிஸ்தான்!

மீண்டும் மழை! பிப். 21ல் 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

எதிர்நீச்சல் தொடர் ஒளிபரப்பில் மீண்டும் மாற்றம்!

அருவருப்பான பேச்சு! - நயினார் நாகேந்திரனுக்கு த்ரிஷா கண்டனம்

SCROLL FOR NEXT