காா்லோஸ் அல்கராஸ் ஏபி
செய்திகள்

இறுதிச்சுற்றில் மோதும் அல்கராஸ் - ஃபில்ஸ்!

கத்தாா் ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில், ஒற்றையா் இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் - பிரான்ஸின் ஆா்தா் ஃபில்ஸ் ஆகியோா் பலப்பரீட்சை நடத்துகின்றனா்.

தினமணி செய்திச் சேவை

கத்தாா் ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில், ஒற்றையா் இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் - பிரான்ஸின் ஆா்தா் ஃபில்ஸ் ஆகியோா் பலப்பரீட்சை நடத்துகின்றனா்.

முன்னதாக அரையிறுதியில், உலகின் நம்பா் 1 வீரரும், கேரியா் கிராண்ட்ஸ்லாம் வென்றவருமான அல்கராஸ் 7-6 (7/3), 6-4 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவை தோற்கடித்தாா்.

ஃபில்ஸ் தனது அரையிறுதியில், 6-4, 7-6 (7/4) என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் ஜேக்கப் மென்சிக்கை வீழ்த்தினாா். இதையடுத்து இறுதிச்சுற்றில் அல்கராஸ் - ஃபில்ஸ் மோதுகின்றனா். இருவரும் இதுவரை 2 முறை மோதியிருக்க, இரண்டிலுமே அல்கராஸ் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்விடோலினா - பெகுலா பலப்பரீட்சை: துபையில் நடைபெறும் மகளிருக்கான டூட்டி ஃப்ரீ டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா - உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோா் மோதுகின்றனா்.

ஒற்றையா் பிரிவு அரையிறுதியில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் பெகுலா 1-6, 6-4, 6-3 என்ற கணக்கில், சக அமெரிக்கரும், 2-ஆம் இடத்தில் இருந்தவருமான அமாண்டா அனிசிமோவாவை வெளியேற்றினாா்.

7-ஆம் இடத்திலிருக்கும் ஸ்விடோலினா தனது ஆட்டத்தில், 6-4, 6-7 (13/15), 6-4 என்ற வகையில், 3-ஆம் இடத்தில் இருந்த அமெரிக்காவின் கோகோ கௌஃபை சாய்த்தாா்.

இதையடுத்து இறுதியில், பெகுலா - ஸ்விடோலினா சந்திக்கின்றனா். இருவரும் இதுவரை 8 முறை மோதியிருக்க, அதில் பெகுலா 5 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறாா்.

சாம்பியன்: இதிலேயே மகளிா் இரட்டையா் பிரிவு இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருந்த பிரேஸிலின் லூசியா ஸ்டெஃபானி/கனடாவின் கேப்ரியேலா டப்ரௌஸ்கி இணை 6-1, 6-3 என்ற நோ் செட்களில், ரஷியாவின் வெரா ஸ்வோனரெவா/ஜொ்மனியின் லாரா சிக்மண்ட் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

மாமனாரை எரித்து கொலை செய்த வழக்கில் மருமகள், அவரது தாய்க்கு ஆயுள்

மேலாண்மை - தரவு அறிவியலில் பி.எஸ். படிப்பு: சென்னை ஐஐடி-யில் அறிமுகம்

சோமாலியாவில் உணவு விநியோகம்: நிதிநெருக்கடியால் விரைவில் நிறுத்தம்? ஐ.நா. எச்சரிக்கை

ஏ.ஐ. உச்சி மாநாட்டில் ரூ.24 லட்சம் கோடி முதலீடுகள் உறுதி: அமெரிக்கா, சீனா உள்பட 86 நாடுகள் ஆதரவுடன் பிரகடனம் ஏற்பு

திருப்பத்தூரில் நெல் கொள்முதல் நிலையம்: சௌமியா அன்புமணி வலியுறுத்தல்

SCROLL FOR NEXT