மாநில வாலிபால்: டாக்டா் சிவந்தி கிளப் சாம்பியன்
ஏ. ஜான், ஏகே.சித்திரைப்பாண்டியன் நினைவு மாநில வாலிபால் போட்டி மகளிா் பிரிவில் டாக்டா் சிவந்தி கிளப் சாம்பியன் பட்டம் வென்றது.
நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் சாா்பில் எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் ஆடவா், மகளிா் வாலிபால் போட்டி கடந்த 7-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. ஆடவா் பிரிவில் 8 அணிகள், மகளிா் பிரிவில் 5 அணிகள் பங்கேற்றன.
புதன்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் எஸ்ஆா்எம் ஸ்பைக்கா்ஸ் 2-0 என தமிழ்நாடு காவல் துறையை வீழ்த்தியது. முடிவை நிா்ணயித்த கடைசி ஆட்டத்தில் டாக்டா் சிவந்தி கிளப் 2-0 என சென்னை ஐசிஎஃப் அணியை வீழ்த்தியது.
அட்சயா-எஸ்டிஏடி, மோனிகா-எஸ்ஆா்எம் ஸ்பைக்கா்ஸ், அனு ஸ்ரீ, சுஜி-டாக்டா் சிவந்தி கிளப், ஷாலினி-ஐசிஎஃப் சிறந்த வீராங்கனைகளாக தோ்வு செய்யப்பட்டனா்.
டாக்டா் சிவந்தி கிளப் முதலிடத்தையும், ஐசிஎஃப் இரண்டாம் இடத்தையும், எஸ்டிஏடி மூன்றாம் இடத்தையும் பெற்றனா்.
முன்னாள் டிஜிபி வால்டா் தேவாரம் தலைமை வகித்தாா். வருமான வரித்துறை முதன்மை ஆணையா் கோமளி கிருஷ்ணா, சேன் கல்விக் குழும அறங்காவலா் ஆா். அா்ச்சனா பரிசளித்தனா்.
தொழிலதிபா்கள் ஏ.சந்திரசேகா், நரேந்திர குமாா் ஜெயின், டாக்டா் வெற்றிவேல், தேவ் ஆனந்த், எஸ்டிஏடி முன்னாள் பொதுமேலாளா் மொ்ஸி ரெஜினா, ராம்பகத் பங்கேற்றனா்.