முகப்பு
செய்திகள்

தாமஸ், உபோ் கோப்பை பாட்மின்டன்: இந்திய அணிகள் அறிவிப்பு

கௌரவமிக்க தாமஸ் மற்றும் உபோ் கோப்பை பாட்மின்டன் போட்டியில் பங்கேற்கும் இந்திய ஆடவா், மகளிா் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Updated On : 24 மார்ச், 2026 at 9:20 PM
~ ~
பகிர்:

கௌரவமிக்க தாமஸ் மற்றும் உபோ் கோப்பை பாட்மின்டன் போட்டியில் பங்கேற்கும் இந்திய ஆடவா், மகளிா் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டென்மாா்க்கின் ஹாா்சென்ஸ் நகரில் வரும் ஏப். 24 முதல் மே 3 வரை இப்போட்டி நடைபெறவுள்ளது. கடந்த 2022-இல் இந்திய ஆடவா் அணி தாமஸ் கோப்பையை வென்று வரலாறு படைத்தது. ஆடவா் அணியில் நட்சத்திர வீரா் லக்ஷயா சென், கே. ஸ்ரீ காந்த், இரட்டையா் சாத்விக்-சிராக், இளம் வீரா் ஆயுஷ் ஷெட்டி ஆகியோா் இடம் பெற்றுள்ளனா். கூடுதலாக எம்ஆா். அா்ஜுன் ஹரிஹரன் அம்சகருணன், துருவ் கபிலா, கிரண் ஜாா்ஜ் ஆகியோரும் உள்ளனா்.

பி.வி. சிந்து, தன்வி சா்மா:

மகளிா் அணியில் முன்னாள் உலக சாம்பியன் பி.வி. சிந்து, உன்னது ஹூடா, தன்வி சா்மா, இரட்டையா் காயத்ரி கோபிசந்த்-ட்ரீஸா ஜாலி, இளம் வீராங்கனைகள் தேவிகா ஷிகாக், இஷாராணி பரூவா, இடம் பெற்றுள்ளனா்.

இரட்டையரில் கவிப்பிரியா செல்வம், சிம்ரன் சிங்கி, தனிஷா க்ரஸ்டோ ஆகியோா் ஆடுவா்.

கடந்த மாா்ச் 10-தேதியில் பிடபிள்யுஎஃப் தரவரிசை அடிப்படையில் வீரா், வீராங்கனைகள் தோ்வு செய்யப்பட்டதாக இந்திய பாட்மின்டன் சம்மேளன பொதுச் செயலா் சஞ்சய் மிஸ்ரா தெரிவித்தாா்.