பாகிஸ்தான் அணி வீரர்கள் (கோப்புப் படம்) 
டி20 உலகக் கோப்பை

இந்தியாவுக்கு எதிராக ஒரு நிமிடம் கூட இளைப்பாறக் கூடாது: பாகிஸ்தான் கேப்டன்

உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராகத் தொடர்ந்து தோற்கும் நிலைமையை மாற்றுவோம் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸாம் கூறியுள்ளார். 

DIN

உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராகத் தொடர்ந்து தோற்கும் நிலைமையை மாற்றுவோம் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸாம் கூறியுள்ளார். 

சூப்பர் 12 சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் நாளை மோதவுள்ளன. இந்த ஆட்டத்துக்கான 12 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் இன்று அறிவித்துள்ளது.

உலகக் கோப்பைப் போட்டிகளில் (50 ஓவர், டி20) இந்தியாவும் பாகிஸ்தானும் இதற்கு முன்பு 12 முறை மோதியதில் அனைத்து ஆட்டங்களிலும் இந்திய அணி வென்றுள்ளது. ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் 7 முறையும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 5 முறையும் இந்திய அணி பாகிஸ்தானைத் தோற்கடித்துள்ளது. 

இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் பற்றி பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸாம் கூறியதாவது:

பாகிஸ்தான் அணியில் இடம்பெறும் 12 பேரை இன்று அறிவிக்கிறோம். 11 வீரர்களின் பெயர்கள் நாளை அறிவிக்கப்படும். உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தொடர்ந்து தோற்றது என்பது எங்களைக் கடந்த ஒன்று. ஆட்ட நாளில் எங்கள் திறமையைப் பயன்படுத்தி வெற்றி பெற எண்ணுகிறோம். எந்த ஒரு சாதனையும் உடைக்கப்பட வேண்டியதே. 

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் நிதானமான மனநிலையில் விளையாடி திறமையை வெளிப்படுத்துவோம். இந்தியா - பாகிஸ்தான் ஆட்டங்கள் பரபரப்பாக இருக்கும். ஒரு நிமிடம் கூட இளைப்பாறக் கூடாது. பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என மூன்றிலும் சிறந்து விளங்க வேண்டும். இங்கு வருவதற்கு முன்பு அணி வீரர்கள் பிரதமர் இம்ரான் கானைச் சந்தித்தோம். 1992 உலகக் கோப்பை வெற்றி குறித்து பேசினார். அணி வீரர்களின் உடல்மொழி அப்போது எப்படி இருந்தது என்பதைத் தெரிவித்தார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT