படம் | AP
டி20 உலகக் கோப்பை

ஆஸி. வீரர்கள் முக்கியமான தருணங்களில் சிறப்பாக செயல்படுவார்கள்: மிட்செல் மார்ஷ்

முக்கியமான தருணங்களில் ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என அந்த அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் தெரிவித்தார்.

DIN

முக்கியமான தருணங்களில் ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என அந்த அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

லீக் சுற்றில் தனது கடைசிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஸ்காட்லாந்துக்கு எதிராக விளையாடியது. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும், அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஃபீல்டிங் செய்த விதம் பல விமர்சனங்களை சந்தித்தது.

ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஃபீல்டிங்கில் நிறைய தவறுகள் செய்தார்கள். கேட்ச்சுகளை சரியாகப் பிடிக்கவில்லை.

இந்த நிலையில், முக்கியமான தருணங்களில் ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என அந்த அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங் செய்த விதம் கண்டிப்பாக எங்களது சிறப்பான செயல்பாடு கிடையாது. நானே மூன்று கேட்ச்சுகளை தவறவிட்டேன் என நினைக்கிறேன். ஆனால், ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மீது மிகுந்த நம்பிக்கையுள்ளது. ஆஸ்திரேலிய வீரர்கள் முக்கியமான தருணங்களில் சிறப்பாக செயல்படக் கூடியவர்கள். நன்றாக இருப்பதாக உணர்கிறேன். தேவை ஏற்பட்டால் பந்துவீசுவேன் என்றார்.

காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் பாதியில் மிட்செல் மார்ஷ் தாயகம் திரும்பியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தம்பதியை தாக்கியதாக 4 போ் மீது வழக்கு

கூலித் தொழிலாளிக்கு ரூ. 1.60 கோடி வரிஏய்ப்பு செய்ததாக ஜிஎஸ்டி நோட்டீஸ்

கல்லறைத் திருநாள்: கிறிஸ்தவா்கள் முன்னோா்களுக்கு அஞ்சலி

ரூ.19.45 லட்சத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

SCROLL FOR NEXT