முகப்பு
டி20 உலகக் கோப்பை

நமது விதி நம்முடைய கைகளில்தான் இருக்கிறது!

சூப்பர் 8 சுற்றில் தோல்வியடைந்தது குறித்து மே.இ.தீ. அணித் தலைவர் பேசியதாவது...

Updated On : 20 ஜூன் 2024, 12:17 pm IST
- Ramon Espinosa
பகிர்:

சூப்பர் 8 சுற்றில் தோல்வியடைந்தது குறித்து மே.இ.தீ. அணித் தலைவர் பேசியது கவனம் பெற்றுள்ளது.

டி20 உலகக் கோப்பை போட்டியில் சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த மே.இ.தீவுகள் அணி 180/4 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இங்கிலாந்து 17.3 ஓவரில் 181/2 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Advertisement

Advertisement

ரோவ்மன் பவல் 17 பந்துகளில் 36 ரன்கள் அடித்து அசத்தினார்.

இந்தத் தோல்வி குறித்து மே.இ.தீ. அணியின் தலைவர் ரோவ்மன் பவல் கூறியதாவது:

பேட்டிங்கினைப் பொறுத்தவரை நாங்கள் 15-20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். பந்து வீச்சாளர்களாக நாங்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பான செயல்பாடுகளை அளித்திருக்கலாம். பேட்டிங்கில் கடைசி 5 ஓவர்களில் எங்களால் ரன்கள் குவிக்க முடியவில்லை. இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை பாராட்டியே ஆக வேண்டும். பிராண்டன் கிங்குக்கு ஏற்பட்ட காயம் எதிர்பாராதது. ஆனால் அடுத்த போட்டிக்கு அவர் தயாராகிவிடுவார் என நம்புகிறேன்.

பிலிப் சால்ட் எங்களுக்கு எதிராக விளையாடும்போதெல்லாம் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். சால்ட்டுக்கு எதிராக எங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்த முடியவில்லை.

நமது விதி நம்முடைய கைகளில்தான் இருக்கிறது. நாங்கள் நல்ல விதமான கிரிக்கெட்டினை தொடர்ந்து விளையாடி வெற்றி பெற்றாக வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments