சூப்பர் 8 சுற்று: இந்தியா பேட்டிங்; குல்தீப் யாதவ் அணியில் சேர்ப்பு!
சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் பார்படாஸில் நடைபெறும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்கிறது.
இந்திய அணியில் முகமது சிராஜுக்குப் பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.