இனிவரும் போட்டிகளில் வெற்றி பெறுவோம்; வங்கதேச கேப்டன் நம்பிக்கை!
சூப்பர் 8 சுற்றின் மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெறுவோம் என வங்கதேச அணியின் கேப்டன் தெரிவித்துள்ளார்.
சூப்பர் 8 சுற்றின் மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெறுவோம் என வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றில் தனது முதல் போட்டியில் வங்கதேசம் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஆஸ்திரேலிய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், சூப்பர் 8 சுற்றின் மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெறுவோம் என வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: அடுத்த இரண்டு போட்டிகள் மிகவும் முக்கியமானது. அந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றால், வங்கதேச அணி நல்ல நிலையில் இருக்கும். அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெறும் நோக்கத்தில் விளையாடுவோம். சில இடங்களில் முன்னேற்றம் தேவைப்படுகிறது. பவர் பிளேவில் விக்கெட்டுகளை இழக்காமல் விளையாட வேண்டும் என்றார்.
சூப்பர் 8 சுற்றின் அடுத்தப் போட்டியில் வங்கதேசம் இந்திய அணியை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.